ஆவியானவரே நீரென்னை
aaviyaanavarae neerennai
ஆவியானவரே, நீரென்னை நிரப்ப வேண்டும் (2) ஆவிக்குரிய வரங்களை அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டும் (2)
1. பாவத்தைக் கண்டித்து உணர்த்திட நீதியின் பாதையில் நடத்திட - 2 இழந்த மகிமை ஈந்திட (2) எனக்காய் பரிந்து பேசிட (2)
2. சத்தியத்திற்குள் நான் நடந்திட சகலத்தையும் நான் அறிந்திட புத்தியாய் பூமியில் வாழ்ந்திட புதிய ஜீவனில் மகிழ்ந்திட
3.பாத்திரம் நிரம்பி வழிந்திட ஸ்தோத்திர கீதங்கள் முழங்கிட பாத்திரர் உம்மைப் புகழ்ந்திட பரலோகப் பலகணித் திறந்திட
4. ஆவியில் நிறைந்து வாழ்ந்திட ஆனந்த கீதங்கள் பாடிட அறிவுக்கெட்டா அன்பை அறிந்திட ஆவியின் களியைக் கொடுத்திட
5. எல்லா ஞானத்தோடும் விளங்கிட பொல்லாங்கனை வென்று முழங்கிட தேவனை அறிவதில் தேர்ந்திட தேவ சித்தம் செய்ய நாடிட