ஆத்ம நேசர் ஆவல் கொண்டு காத்து நிற்கிறார்
aathma nesar aaval kondu kaathu nirkiraar
1. ஆத்ம நேசர் ஆவல் கொண்டு காத்து நிற்கிறார் நீசப் பாவி வா என்னண்டை என்கிறார்.
2. பாடுபட்டேன் சிலுலையில் மாண்டேன் உனக்காய் எந்தன் மீட்பைத் தள்ளிடாமல் நம்புவாய்.
3. நேசர் உன்னை மாறி மாறிக் கூவி நிற்கிறார் ப்ராண நாதர் இன்ப சத்தம் கேட்கப் பார்.
4. இப்போதே ரட்சண்ய காலம தாமதியாதே மீட்பர் பாதம் அண்டிக் கொள்வாய் இன்றைக்கே.
5. யேசு நாதா! இதோ வந்தேன் ஏற்றுக் கொள்ளுமே பாவம் போக்கி மோட்ச பாக்யம் தாருமே.