ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே
aarpparippom nal aandilae
ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே ஆற்புதமாய் ஈந்த ஆண்டிலே அன்பரின் அன்பை எண்ணி பாடுவோம் ஆவிக்குள்ளாக என்றும் மகிழ்வோம்
1. கர்த்தர் நல்லவர் என ருசித்தேன் கர்த்தரே என்றும் போதுமானவர் ஒரு நன்மையும் குறையின்றியே ஒப்பற்ற நேசரென்னைக் காத்திட்டார்
2. வந்த வனாந்திர வழியெல்லாம் வாக்குத்தத் தத்தால் என்னைத் தேற்றினார் ஆராயமுடியாத பாதையில் ஆச்சரியமாகவே நடத்தினார்
3. தந்தை மைந்தனை சுமந்தது போல் தாங்கி சுமந்தாரே தோளின் மீதே எந்தன் கேடகம் அரண் அவரே எந்தன் அடைக்கலமும் அவரே
4. ஆசீர்வாதமான ஆண்டதிலே ஆசீர்வதித்து என்னை அனுப்பும் அதிசயமாம் உம் கிருபையை அடிமையில் விளங்கச் செய்யுமே
5. பூரணமாய் உம் சித்தம் செய்திட பூவில் அர்ப்பணித்தேனே என்னையும் களிப்புடனே ஓட்டம் ஓடியே கண்டிடுவேன் நேசர் இயேசுவை