ஆரிரோ பாலகா
aariro paalagaa
ஆரிரோ பாலகா ஆரிரோ நாயகா ஆரிரோ கண்மணி என் இசை கேட்டு நீ தூங்காயோ
1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக இயேசு ராஜன் பிறந்தார் ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக பெத்லகேமில் பிறந்தார்
2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை மேய்ப்பர் தண்டு பணிந்தார் வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து தேவ பாதம் பணிந்தார்
3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன் பாரில் வந்து பிறந்தார் பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன் மீட்க தன்னைக் கொடுத்தார்