ஆராய்ந்து முடியாத
aaraayndhu mudiyaadha
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி முடியாத அதிசயம் இதுவரை பார்க்காத அற்புதம் சிந்தைக்கு எட்டாத ஆச்சரியம் இன்றே இன்றே செய்கின்றார் தம் மகிமையை விளங்கச் செய்கின்றார் இன்றே இன்றே செய்திடுவார் நம் விசுவாசம் பெருகச் செய்துடுவார்
1.அதிசயத்தைக் கண்கள் காணச் செய்வார் தீராத வியாதிகளை சொஸ்தமாக்குவார் நம்முடைய நோய்களை சுமந்து கொண்டார் அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்
2.நமக்காக யுத்தத்தை செய்திடுவார் கெர்ஜிக்கும் சத்துருவைத் துரத்திடுவார் சுதந்திரத்தை நிலை நாட்டிடுவார் ராஜா வீட்டு பிள்ளையாய் வாழ வைப்பார்
3.தளர்ந்த கைகளைத் திடப்படுத்திடுவார் தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்திடுவார் பெலவீனத்தில் பெலன் தந்திடுவார் புது பெலன் உன்னக்குள் தோன்றச் செய்வார்