ஆராதிப்பேன் நான் உம்மை
aaraadhippen naan ummai
ஆராதிப்பேன் நான் உம்மை ஆராதிப்பேன் நான் கீதங்களால் உம்மை ஆராதிப்பேன் நான் ஆர்ப்பரித்திடுவேன் இரட்சகர் நாமம் என்றும் வாழ்க போற்றித் துதித்திடுவேன் புண்ணிய நாமம் என்றும் வாழ்த்திட ஆத்ம நேசரே உம் பிரசன்னம் தாரும் என் மனதினிலே நீர் என்றும் வாழ்ந்திடும்
இயேசுநாதா இறங்கிடுமே என் பாவமெல்லாம் போக்கினீரே துக்க பாரமெல்லாம் நீக்கி விட்டீர் கோர குருசினில் நீர் சுமந்து தீர்த்தீர் ஆத்மாவில் நீர் வந்து விட்டீர் ஆனந்த கண்ணீரால் ஆற்றிவிட்டீர் - 2
சிநேக நாதா ஜீவன் தந்தீர் உம் அன்பால் என்னை மீட்டுவிட்டீர் உம் கிருபை என்னை தாங்கிடுமே வாழ்நாளெல்லாம் உம்மை சேவிப்பேனே கண்மணி போல் காத்திடுவீர்-உம் கரங்களால் என்னை அணைத்திடுவீர்