ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே
aaraadhikkindrom um naamathaiyae
ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே உயர்த்துகின்றோம் உம் நாமத்தையே ஆராதிக்கின்றோம் இயேசு நாமத்தையே உயர்த்துகின்றோம் இயேசு நாமத்தையே
ஆராய்ந்து முடியா காரியங்கள் எண்ணி முடியாத அதிசயங்கள் கிரகிக்கக்கூடாத அற்புதங்கள் கிறிஸ்தேசு நமக்காய் செய்தாரே
வல்லமையுடைய தேவனே மகிமைகள் நமக்கு செய்தாரே ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே ஆவியும் தேவனில் களிகூருதே
சமுகம் முன் செல்ல வாக்குத் தந்தார் சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார் நடத்துவது எல்லாம் நன்மைக்கே நன்றி சொல்லி உம்மைத் துதித்திடுவோம்