ஆராதனை இயேசுவுக்கே
aaraadhanai yesuvukke
ஆராதனை இயேசுவுக்கே என்னை ஆட்கொண்ட தேவனுக்கே தினம் அல்லேலூயா அல்லேலூயா கீதம் நான் பாடிடுவேன்
தப்புவிக்க வல்லவர் இயேசு என் தப்பிதங்களை மன்னித்தார் தாயைப் போல தேற்றிடுவார் தடையெல்லாம் நீக்கிடுவார்
பரலோக கீதசத்தம் இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார் நம் பரலோக தேவனையே
மேக மீதில் இயேசு வரும் நாள் மிக வேகமாய் நெருங்கிடுதே மறுரூபமே அடைந்திடுவோம் மகிமையில் பறந்திடுவோம் நாம்
நித்திய கன மகிமை என் நேசருக்கு உண்டாகட்டும் ராஜ்யமும் வல்லமையும் என்றென்றும் உண்டாகட்டும்