ஆனந்தமான நாளில்
aanandhamaana naalil
ஆனந்தமான நாளில் இயேசு வருவார்
1. வானவருடனே தூயர்களும் - மேசியா இயேசு வுடன் பொன்னொளி மணிபோல் அனைவரும் மின்னிட இன்னிசை கீதங்கள் விண்ணில் முழங்க ஓங்குமே பேரானந்தம் - ஆஹா! - ஆனந்தமே - ஆன
2. ஆர்வமுடன் மனத்தூய்மையுடன் - அன்பனை சந்ததமும் சிந்தனை செய் திட்ட சுந்தர மாக்கு சபா நாயகியாம் சீயோன் நாதனைச் சந்திக்க பொங்கும் மங்களம் - ஆஹா! - ஆனந்தமே - ஆன
3. தந்தை தாய் இனம் ஜனம் பந்துமித்ரர் -பந்தம் யாதுமின்றி அந்தர மீதினில் அன்பரோடுறவாடி அனுதினம் மனமகிழ்ந்ததிகனி ஈந்தோர்கள் கண்டாந்தம் நிரம்ப - ஆஹா! - ஆனந்தமே - ஆன்
4. நானிலத்தில் நாதன் வரவை - நாடித் தேடி வாடினோர் நலமுடன் வானில் எக்காளம் தொனிக்கும் நேரம் கவலை ஒளிந்து கண்ணீர் காமதால் மறைந்திட கானங்கள் பாடிடுவோம் - ஆஹா! - ஆனந்தமே - ஆன்
5. ஆதி அப்போஸ்தலர் கண்டனரே -அன்பரும்மோடிருந்தே காதலா நாங்களோ ஆவியின் கண்களாலே மா மணவாளன் மனோரம்மியமாய் கண்டு ஆவலோடோடி வந்தோம் - ஆஹா! - ஆனந்தமே - ஆன