ஆனந்த பாடல்கள் பாடி
aanandha paadalgal paadi
ஆனந்த பாடல்கள் பாடி துதித்து கர்த்தரை புகழ்ந்திடுவேன் ஆர்ப்பரிப்போடே கூடி மகிழ்ந்து அன்பரை புகழ்ந்திடுவேன்
அழைத்த தேவன் உண்மை உள்ளவர் அணைத்து என்றும் நடத்துவார் பிழைக்க நாம் அவர் சமூகத்தில் என்றும் உழைப்பில் நின்று மகிழுவோம்
நம்பிக்கை யற்றோராய் அலைந்த வேளை நாதன் நம்மை தேடி வந்தார் பாவ பாரங்கள் பறக்க செய்தே பாரில் உயர்வை எனக்கு தந்தார்
பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் யாவையும் தீர்த்தாரே துரோகி என்னை சுத்திகரித்தே தூய்மையாக்கி உயர்த்தினாரே
பூரணராகவே பூவில் வாழ்ந்திட கிருபை எனக்கு அளித்தாரே ஆவியின் மணவாட்டியாவதற்கு ஆசீர்வாதம் அருளினாரே