ஆகாயம் போதாதய்யா
aagaayam podhaadhayyaa
ஆகாயம் போதாதய்யா உந்தன் அன்பின் நீளம் சொல்ல ஆழ்கடல் பத்தாதய்யா உந்தன் அன்பின் ஆழம் சொல்ல
என் மேல் நீர் கொண்ட அன்பு அக்கினி போன்றதய்யா நதி வந்து மோதினாலும் தணித்திட முடியாதய்யா
உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே!
ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வாதை எல்லாம் மாறும் உம் பார்வை பட்டால் போதும் என் பாதை அழகாய் மாறும்
இந்த வானம் பூமி யாவும் மாறுமே உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே
என் காலம் உந்தன் கையில் எனக்காக யாவும் செய்வீர் என் இரும்புக்கதவை உடைத்து என் இருளில் ஒளியாய் வந்தீர்
இ்ந்த மலைகள் எல்லாம் வி்லகி போனாலும் என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே!