ஆதிமுதல் வேதமெல்லாம்
aadhimudhal vedhamellaam
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது-அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னது-அந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது-அவர் ஜீவ பலியானதையும் வெளிப்படுத்தியது
மூலை இருந்தாரை முற்றத்தில் விட்டிடவே சாலப் பெரிய எங்கள் சாமி வருவார்-என்றும் தண்டத்தைத் தான் ஏற்று தரணியைக் காத்திடவே மன்னன் வருவார் எனவும் வேதம் சொன்னது
நீற்றைப் புனைந்துமென்ன நீராடப் போயிமென்ன ஆற்றைக் கடக்கும் வழி அறிந்து கொண்டாயா மாற்றிப் பிறக்க வழி தெரியா உனைக் காத்து சேற்றிலும் சிறை மீட்க தெய்வம் வந்தது