ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
aadhi thiruvaarthai indru manuvaanaar
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார் இந்த அவனியை மீட்டிடவே பாலனாகினார் வானமே வாழ்த்துது பூமியே போற்றுது
ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று பிறந்தார் தேவ மகன் ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில் துளிர்த்தது இந்நாளில் பணிந்து குனிந்து வணங்கி போற்றும் பார்தல மானிடரே நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த புண்ணியர் இவர் தானே
காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார் தேவனுக்கே மகிமை காட்டிலும் மேட்டிலும் - வாழ்ந்திடும் ஜனங்கள் காண்பார் சமாதானம் அடிமை விலங்கை ஒடித்து மீட்க பிறந்தார் திரு மைந்தன் ஆனந்த வாழ்வினை தந்திட வந்த இரட்சகர் இவர் தானே