ஆச்சர்யமே உம் கிருபை
aaccharyamae um kirubai
1. ஆச்சர்யமே உம் கிருபை மா நீசன் மீட்புற்றேன் இழந்தேன் நான் தூரம் போனேன் இப்போது பற்றினேன்.
2. கிருபையாலே போதித்தீர் நெஞ்சே நீ அஞ்சாதே நீக்கினீரே பயமெலாம் நம்பிய நேரமே.
3. ஆபத்தையும் பயத்தையும் நீக்கினீர் என்றுமாய் இம்மட்டும் காத்த தயவால் இன்னமும் காருமே.
4. நன்மையை வாக்களித்தீரே நீரே என் நம்பிக்கை கேடயம், என் பங்குமானீர் என் வாழ்வு முற்றிலும்.
5. மாம்ச இதயம் நின்றுபோம் இவ்வாழ்வும் ஒழியும் பொய் முகம் நீங்கி பேரின்ப நித்ய வாழ்வடைவேன்.