ஆச்சரியமான அன்பினாலே
aacchariyamaana anbinaalae
ஆச்சரியமான அன்பினாலே என்னை சிநேகித்தீர் தோளினில் சுமந்தீர் -ஜீவனைத்தந்தீர் மார்பினில் மகிழ்ந்திடுவேன்
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா மகிழுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்
உந்தனின் பார்வைக்கு அருமையாக கிருபை பொழிந்திட்டீரே! கனப்படுத்தினீர் மேன்மைப்படுத்தினீர் அன்புக்கு ஸ்தோத்திரம்
ஆவியினாலே அபிஷேகம் செய்தீர் அக்கினி பொழிந்திட்டீரே! உன்னத பெலத்தால் ஆவியின் வரத்தால் உள்ளத்தை மகிழச் செய்தீர்
புத்தாண்டைக் காண கிருபை செய்தீர் எல்லாம் உம் தயவல்லோ? ஏந்தினீரே தாங்கினீரே சுமந்து கரைசேர்ப்பீரே