ஆபிரகாமை ஆசீர்வதித்த
aabiragaamai aaseervadhitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
1. செல்வி மணமகள் _________ ம் செல்வன் மணமகன் ____________ ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி இணைந்து வாழவே!
2. கண்ணின் மணிபோல் கணவனும் இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ… என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும் இணைந்து வாழவே (2)
3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின் பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ… இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம் நயந்து வாழவே இணைந்து வாழவே
4. கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் என்றும் ஆசிபெற்று இனிது வாழவே வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும் இணைந்து வாழவே - இணைந்து வாழவே
5. உள்ளம் விரும்பிய செல்வமுடன் உத்தமச் சேய்களையே தாரும் நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும் வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே வையகந்தனில் வல்லபிதா உம்மை வணங்கி வாழவே - வணங்கி வாழவே